உள்ளூர் செய்திகள்
மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம்
- எல்.கே.ஜி., யு.கே.ஜி. முதல் 2-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
- மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் இந்த புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
சென்னை:
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையின் அடிப்படையில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
5 ஆண்டு கட்டமைப்பு என்ற பெயரில் இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
எல்.கே.ஜி., யு.கே.ஜி. முதல் 2-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் இந்த புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
புதிய பாடத்திட்டத்தின்படி மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆசிரியர்கள் தயாராக வேண்டும் என்று சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
3 முதல் 8 வயது வரையிலான குழந்தைகளின் கல்வியை சிறுவயதில் இருந்தே மேம்படுத்தும் வகையில் இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இது தொடர்பான தகவல்கள் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.