உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

Published On 2023-01-27 08:13 GMT   |   Update On 2023-01-27 08:13 GMT
  • கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
  • நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்: 

கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு சன்னியாசி பேட்டையை சேர்ந்தவர் முருகன் (வயது 35) மனைவி சத்தியவாணி (24) சம்பவத்தன்று முருகன் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் முருகன் கரண்டியால் தனது மனைவி சத்தியவாணியை தாக்கியதில் அவர் காயம் அடைந்தார். பின்னர் சத்தியவாணி கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இது குறித்து மனைவி சத்தியவாணி கொடுத்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News