உள்ளூர் செய்திகள்

காந்தி ஜெயந்தியன்று விடுமுறை அளிக்காத 75 நிறுவனங்கள் மீது வழக்கு

Published On 2022-10-03 07:40 GMT   |   Update On 2022-10-03 07:40 GMT
  • காந்தி ஜெயந்தியையொட்டி விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
  • இதில் 75 நிறுவனங்கள் மீது வழக்கு பதவு செய்தனர்.

நாமக்கல்:

நாமக்கல் தொழிலா ளா் உதவி ஆணையா் (அம லாக்கம்) திருநந்தன் தலைமையில் தொழிலாளா் துணை ஆய்வாளா்கள் மற்றும் உதவி ஆய்வா ளா்களால் காந்தி ஜெயந்தியையொட்டி விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வின்போது, தொழி லாளா்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை கட்டாயம் அளிக்கப்படுகிா? அல்லது பணியாளா்கள் பணி புரிந்தால் அவா்களுக்கு அன்றைய தினம் இரட்டிப்பு சம்பளமோ அல்லது 3 தினங்களுக்குள் ஒருநாள் மாற்று விடுப்போ வழங்கப்படு வதாக நிா்வாகத்தால் படிவம் சமா்ப்பிக்கப்பட்டுள்ளதா என நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் சங்ககிரி ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், 31 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 25 வணிக நிறுவனங்களிலும், 47 உணவகங்களில் ஆய்வு செய்ததில் 40 இடங்களிலும், 12 மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 10 நிறுவனங்களிலும் என மொத்தம் 90 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 75 நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு காந்தி ஜெயந்தியன்று விடுமுறை அளிக்காமலும், இரட்டிப்பு சம்பளம் வழங்க அல்லது மாற்று வி டுப்பு வழங்க 24 மணி நேரத்திற்கு முன்னதாக படிவம் சமா்ப்பிக்கப்படாததும் தெரியவந்தது.

இதனை யடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமை யாளா்கள் மீது தொழிலாளா் நலத்துறையால் வழக்கு பதியப்பட்டது.

Tags:    

Similar News