உள்ளூர் செய்திகள்

திருமாணிக்குழியில் ஆற்று மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் மீது வழக்கு: மாட்டு வண்டிகள் பறிமுதல்

Published On 2023-05-17 08:11 GMT   |   Update On 2023-05-18 10:34 GMT
  • 4 பேர் கொண்ட கும்பல் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி கடத்திக் கொண்டிருந்தனர்.
  • தலைமறைவாக உள்ள 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

கடலூர்:

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் இன்று காலை திருமாணிக்குழி ஆற்றங்கரை பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர். அப்போது அங்கே 4 பேர் கொண்ட கும்பல் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி கடத்திக் கொண்டிருந்தது. இதை பார்த்த போலீசார் அந்த கும்பலை பிடிக்க முயன்றனர். உடனே அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர்.

இதையடுத்து மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட 4 மாட்டு வண்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவர்கள் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திருமாணிக்குழியை சேர்ந்த ராஜாங்கம், செல்வம், வெள்ளிகண்ணு, நம்பியார் என்பது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News