உள்ளூர் செய்திகள்
கோர்ட்டில் ஆஜர் ஆகாத 13 பேர் மீது வழக்கு
- வழக்குகளில் தொடர்புடைய 13 பேர் கோர்ட்டில் ஜாமீன் பெற்றனர்.
- போலீசார் 13 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மற்றும் ஊத்தங்கரை பகுதிகளில் வழக்குகளில் தொடர்புடைய 13 பேர் கோர்ட்டில் ஜாமீன் பெற்றனர்.
அவர்கள் ஜாமீன் உத்தரவுகளை பின்பற்றாமல் இருந்ததற்காகவும், கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் இருந்ததாக ஓசூர் டவுன் மற்றும் ஊத்தங்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் 13 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.