உள்ளூர் செய்திகள்

ஸ்ரீபெரும்புதூரில் கார் தொழிற்சாலை ஊழியர் வீட்டில் 35 பவுன் நகை திருட்டு

Published On 2022-08-18 06:59 GMT   |   Update On 2022-08-18 06:59 GMT
  • ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டு கோட்டை பகுதியில் உள்ள கார் தயாரிக்கும் தொழிற்சாலையில் காமராஜ் ஊழியராக வேலை செய்து வந்தார்.
  • காமராஜ் திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிட குடும்பத்துடன் சென்றார்.

ஸ்ரீபெரும்புதூர்:

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வீராச்சாமி பிள்ளை தெருவை சேர்ந்தவர் காமராஜ் (வயது 34). இவர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டு கோட்டை பகுதியில் உள்ள கார் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் காமராஜ் நேற்று முன்தினம் திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிட குடும்பத்துடன் சென்றார். இதற்கிடையே நேற்று அவரது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்ட பக்கத்து வீட்டுக்காரர் ஸ்ரீபெரும்புதூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் காமராஜ்க்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் விசாரணையில், மர்ம நபர்கள் காமராஜ் கோவிலுக்கு சென்றதை நோட்டம் விட்டு வீட்டில் யாரும் இல்லாததை உறுதி செய்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே பீரோவில் இருந்த 35 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் ரூ.1 லட்சம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து கைரேகை மற்றும் தடவியல் நிபுணர்கள் வரவழைத்து தடயங்களை சேகரித்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை கைப்பற்றி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News