உள்ளூர் செய்திகள்

9 பேர் காயம்

சென்டர் மீடியனில் கார் மோதி விபத்து

Published On 2022-08-01 04:48 GMT   |   Update On 2022-08-01 04:48 GMT
  • திண்டுக்கல் - திருச்சி 4 வழிச்சாலையில் திடீரென நிலை தடுமாறிய கார் தாறுமாறாக ஓடியது
  • இதில் சென்டர் மீடியனில் கார் மோதி விபத்துக்குள்ளானது

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே செங்குளத்துப்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்முருகன் (வயது 34). இவரது மனைவி கற்பகம் (32). தந்தை அழகர்சாமி (57), மகள் மதுமிதா (11), மகன் யோகதர்ஷன் (9), உறவினர்கள் ஆசை பிரியா, பால்பாண்டி, யோகிசாய் (2), உள்பட 9 பேர் காரில் திருச்சி சமயபுரத்துக்கு சென்றனர்.

சாமி தரிசனம் முடித்து விட்டு மீண்டும் காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். திண்டுக்கல் - திருச்சி 4 வழிச்சாலையில் மாணிக்கம் பிள்ளை சத்திரம் பகுதியில் வந்தபோது திடீரென நிலை தடுமாறிய கார் தாறுமாறாக ஓடியது. சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் சிறுவன் யோகி சாய் படுகாயமடைந்தான். மற்றவர்களும் காயமடைந்ததால் அவர்களை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News