உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கு நடைபெற்றபோது எடுத்த படம்.

புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு

Published On 2023-02-22 14:59 IST   |   Update On 2023-02-22 14:59:00 IST
  • புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கு தேசிய நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக நடைபெற்றது.
  • டாக்டர் அபிராமி மற்றும் டாக்டர் பாண்டிச்செல்வி ஆகியோர் சிறப்புரையாற்றினார்.

நெல்லை:

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கு தேசிய நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக நடைபெற்றது. இதில் வாசுகி வரவேற்று பேசினார். ரோட்டரி கிளப்பின் நைனா முகம்மத், ரோட்டரி கிளப்பின் தலைவர் ஹாஜி இப்ராகிம் அறிமுகவுரை ஆற்றினார். நெல்லை கேன்சர் கேர் திட்ட ஒருங்கிணைப்பாளர் பி.முருகன் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு, தனி மனித ஒழுக்கம் மற்றும் சமூக சுய கட்டுப்பாடுகள் பற்றி எடுத்துரைத்தார். டாக்டர் எம்.அபிராமி மற்றும் டாக்டர் பாண்டிச்செல்வி சிறப்புரையாற்றினார். புற்றுநோய்களின் வகைகள் மற்றும் புற்றுநோய் வராமல் தடுப்பது எப்படி என்பதை பற்றி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பேராசிரியர், திட்ட அலுவலர்கள் சென்றாய பெருமாள், பேராசிரியர் லெனின் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News