உள்ளூர் செய்திகள்

கிரெயின்ஸ் வலைத்தளத்தில் பதிவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

Published On 2023-04-09 08:31 GMT   |   Update On 2023-04-09 08:31 GMT
  • நில உடமை விபரம் சரிபார்க்கப்பட்டு வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
  • உரிய அலுவலர்களை தொடர்பு கொண்டு விவரங்களை சரிபார்த்து கொள்ள வேண்டும்.

நீடாமங்கலம்:

வலங்கைமான் மற்றும் குடவாசல் விவசாயிகளுக்கு, வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயசீலன் ஒரு தகவல் கொடுத்துள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:-

மத்திய , மாநில அரசுகள் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக "வேளாண் அடுக்கு" என்ற திட்டத்தினை செயல்படுத்த உள்ளது.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வேளாண்மை, தோட்டக்கலை. கூட்டுறவு, பட்டு வளர்ச்சி, உணவு வழங்கல், வேளாண் பொறியியல், ஊரக வளர்ச்சி, கால்நடை பராமரிப்பு ,வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம், விதை சான்றளிப்பு , சர்க்கரை துறை உள்ளிட்ட 13 துறைகளில் அனைத்து விவசாயிகளுக்கும் அனைத்து திட்ட பலன்களும் கிடைக்கச் செய்யும் வகையில் GRAINS என்ற வலைதளத்தில் விவசாயிக ளுடைய விபரங்கள் குறிப்பாக நில உடமை விபரம் உள்ளிட்ட விபரங்களை சரிபார்க்கப்பட்டு வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

இதில் அந்தந்த கிராமங்களினங கிராம நிர்வாக அலுவலர்கள் உதவி வேளாண்மை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இனி வரும் காலங்களில் அனைத்து விவசாய நல திட்டங்களும் GRAINS மூலம் விவசாய பெருமக்களை சென்றடை உள்ளது. இதனால் அனைவரும் தங்களது நில உடமை ஆவணம், ஆதார் அட்டை நகல், புகைப்படம், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம்ஆகியவற்றுடன் உரிய அலுவலர்களை தொடர்பு கொண்டு விவரங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News