உள்ளூர் செய்திகள்

கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

Published On 2022-12-12 09:36 GMT   |   Update On 2022-12-12 09:36 GMT
  • தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் முருகேசன் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் ஆபரேட்டர்களுக்கு தடையற்ற சிக்னலும், உபகரணங்களும் வழங்காமல் அவர்களின் மேல் சுமத்தப்பட்டுள்ள நிலுவை தொகையை ரத்து செய்ய வேண்டும்.

நாமக்கல்:

தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் முருகேசன் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் அவர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கேபிள் டிவி நிலுவை தொகை என்ற பெயரில் காவல்துறை மற்றும் வருவாய் துறையை பயன்படுத்தி, கேபிள் டிவி ஆபரேட்டர்களை குற்றவாளிகள் போல் சித்தரிப்பதை நிறுத்த வேண்டும். அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் ஆபரேட்டர்களுக்கு தடையற்ற சிக்னலும், உபகரணங்களும் வழங்காமல் அவர்களின் மேல் சுமத்தப்பட்டுள்ள நிலுவை தொகையை ரத்து செய்ய வேண்டும். முதல்- அமைச்சர் இந்த பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும். கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு நல வாரியம் அமைத்து தர வேண்டும். இவ்வாறு மனுவில் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News