உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவில் அருகே வியாபாரி கொலைக்கு தொழில் போட்டி காரணமா?- தனிப்படை கேரளா விரைந்தது

Published On 2023-02-10 09:38 GMT   |   Update On 2023-02-10 09:38 GMT
  • கேரள மாநிலம் திருச்சூரில் மணிகண்டன் இரும்பு வியாபாரம் செய்து வந்தார்.
  • மணிகண்டனுக்கும், அவரது உறவினருக்கும், முன்விரோதம் இருந்தது தெரியவந்தது.

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் தெற்கு பணவடலி சத்திரத்தை சேர்ந்தவர் மணி கண்டன் (வயது 40).

கொலை

இவர் கேரள மாநிலம் திருச்சூரில் இரும்பு வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் மதுரை யில் வசித்து வந்தனர்.

கடந்த 8-ந் தேதி கோவில் கொடை விழாவிற்காக மணிகண்டன் தனது குடும்பத்தினருடன் பணவடலிசத்திரம் வந்தார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே மணிகண்டன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

காரணம் என்ன?

இதுதொடர்பாக பணவடலிசத்திரம் போலீசார் விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் மணிகண்டனுக்கும், பணவடலிசத்திரத்தை சேர்ந்த அவரது உறவினருக்கும், முன்விரோதம் இருந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் அப்பகுதியை சேர்ந்த சிலரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் கொலைக்கான காரணம் குறித்து தெரியவில்லை.

தொழில் போட்டி காரணமா?

இதற்கிடையே தொழில் போட்டி காரணமாக மணிகண்டன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கி றார்கள்.

இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் கேரளா சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News