உள்ளூர் செய்திகள்

கட்டிட மேஸ்திரி கிணற்றில் விழுந்து சாவு

Published On 2023-08-23 09:19 GMT   |   Update On 2023-08-23 09:19 GMT
  • கிணற்றில் அடையாள தெரியாத ஆண் சடலம் இருப்பதாக வேப்ப னப்பள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
  • கட்டிட மேஸ்திரியான சிவா கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேப்பனப்பள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள சின்ன பூதிமுட்லு பகுதியைச் சேர்ந்த சங்கரன் என்பவ ருடைய கிணற்றில் அடையாள தெரியாத ஆண் சடலம் இருப்பதாக வேப்ப னப்பள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உதவி காவல் ஆய்வாளர் ஆனந்தன் மற்றும் போலீசார் இது குறித்து விசாரனை மேற்கொண்டனர்.

அப்போது கிணற்றில் கிடந்த வாலிபர் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் சிவா (வயது27). கட்டிட மேஸ்திரி யாக வேலை செய்து வந்தார் என்பது தெரியவந்தது.

பின்னர் உடலை கைப்பற்றிய போலீசார் பிரதே பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இப்பகுதியில் கட்டிட மேஸ்திரியான சிவா கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tags:    

Similar News