உள்ளூர் செய்திகள்

தங்கையை தாக்கிய அண்ணன் கைது

Published On 2023-07-12 15:59 IST   |   Update On 2023-07-12 15:59:00 IST
  • இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
  • ஆத்திரமடைந்த காந்தன் கல்லால் தனது தங்கை மல்லிகாவை கடுமையாக தாக்கியுள்ளார்.

காரிமங்கலம், 

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டி பஞ்சாயத்து உட்பட்ட ஹேப்பி நகரை சேர்ந்தவர் மல்லிகா (வயது45). இவருடைய அண்ணன் காந்தன் (50). இருவருக்கும் இடையே நிலம் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் மல்லிகாவுக்கு சொந்தமான இடத்தில் காந்தன் சுவர் எழுப்பி உள்ளார். இதை மல்லிகா கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த காந்தன் கல்லால் தனது தங்கை மல்லிகாவை கடுமையாக தாக்கியுள்ளார்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இது குறித்து மல்லிகா கொடுத்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார் காந்தனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News