உள்ளூர் செய்திகள்

தருமபுரியில் அருகே நிலம் அளவீடு செய்ய லஞ்சம் வாங்கிய நிலஅளவையர் கைது

Published On 2025-07-11 17:15 IST   |   Update On 2025-07-11 17:16:00 IST
  • லஞ்ச ஒழிப்பு போலீசார் மறைந்து இருந்து விஜயமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
  • கைதான அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி:

தருமபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்த மணியம் பாடியில் நிலஅளவையாளராக விஜயகுமார் என்பவர் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் அவர் நிலம் அளவீடு செய்ய இன்று மதியம் ஒருவரிடம் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மறைந்து இருந்து விஜயமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். கைதான அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News