உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே வாலிபரை கத்தியால் குத்திய காதலன் அதிரடி கைது

Published On 2023-02-15 07:34 GMT   |   Update On 2023-02-15 07:34 GMT
நான் காதலிக்கும் பெண்ணை நீ எப்படி நிச்சயம் செய்ய போவாய் என்று கூறி ஏழுமலையின்முதுகில் கத்தியால் குத்தி, உன்னை கொலை செய்யாமல் விடமாட்டேன் என்றார்.

கள்ளக்குறிச்சி:

சங்கராபுரம் அருகே புத்தந்தூர் காட்டு க்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 26) இவர் சம்பவத்தன்று புத்தந்தூர் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் (24), என்பவர் நான் காதலிக்கும் பெண்ணை நீ எப்படி நிச்சயம் செய்ய போவாய் என்று கூறி ஏழுமலையின் முதுகில் கத்தியால் குத்தி, உன்னை கொலை செய்யாமல் விடமாட்டேன் என்று கூறியதாக தெரிகிறது.

இவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஏழுமலை கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர்.

Tags:    

Similar News