உள்ளூர் செய்திகள்

கோவையில் பெண்ணை கத்தியால் குத்தி விட்டு வாலிபர் ஓட்டம்

Published On 2023-03-10 15:19 IST   |   Update On 2023-03-10 15:19:00 IST
  • இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
  • புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்

பீளமேடு,

கோவை மாதா கோவில் வீதி சவுரிபாளையத்தை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் வீட்டு வேலை செய்து வருகிறார். இவரது தங்கை மகளின் கணவர் ஆண்டனி. பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவருக்கும் இவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு வந்தது.இதுகுறித்து பேசுவதற்கு விஜயலட்சுமி தனது மகனுடன் ஆண்டனி வீட்டிற்கு சென்றார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஆன்டனி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து விஜயலட்சுமியின் மகன் சவுந்தர்ராஜனை குத்த முயன்றார். அப்போது விஜயலட்சுமி தடுக்க முயன்றபோது அவரது வலது கையில் கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் காயமடைந்த விஜயலட்சுமியை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து விஜயலட்சுமி பீளமேடு போலீசாருக்கு புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து ஆண்டனி மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News