உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடி கடலில் மூழ்கி சிறுவன் பலி

Published On 2023-03-27 14:19 IST   |   Update On 2023-03-27 14:19:00 IST
  • திரேஸ்புரத்தை சேர்ந்த பிரின்ஸ்டன் மகன் ஜெரோசின் கடலில் மூழ்கி மூச்சு திணறி இறந்துவிட்டார்.
  • இது குறித்து தருவைகுளம் கடலோர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி திரேஸ்புரம் கடல் பகுதியில் இருந்து சங்கு குழி தொழில் செய்வதற்காக நாட்டுப் படகில் 5 தொழிலாளர்கள் புறப்பட்டு சென்றனர். சுமார் 10 கடல் மைல் தொலைவில் சங்கு குளி தொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது அவர்களுடன் சென்ற திரேஸ்புரத்தைச் சேர்ந்த பிரின்ஸ்டன் மகன் ஜெரோசின்(15) என்பவர் கடலில் மூழ்கி மூச்சு திணறி இறந்துவிட்டார்.

இது குறித்து தருவைகுளம் கடலோர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவரது உடல் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News