உள்ளூர் செய்திகள்

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

Published On 2023-06-30 15:18 IST   |   Update On 2023-06-30 15:18:00 IST
  • அங்குள்ள மின்கம்பத்தை தொட்டதாக தெரிகிறது.
  • இதில் மின்சாரம் தாக்கி அந்த சிறுவன் உயிரிழந்தான்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவரது மகன் பூவேந்தர் (வயது6). இந்த சிறுவன் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தான். அப்போது அங்குள்ள மின்கம்பத்தை தொட்டதாக தெரிகிறது. இதில் மின்சாரம் தாக்கி அந்த சிறுவன் உயிரிழந்தான்.

இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News