உள்ளூர் செய்திகள்

எரிந்து நாசமான பொக்லைன் எந்திரம்.

ஒட்டன்சத்திரம் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த பொக்லைன் எந்திரம்

Published On 2022-10-07 05:01 GMT   |   Update On 2022-10-07 05:01 GMT
  • காவிரியம்மாபட்டியில் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது திடீரென பொக்லைன் எந்திரம் தீப்பற்றி எரிந்தது.
  • இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் அருகே ஒட்டன்சத்திரம் வழியாக பொள்ளாச்சிக்கு 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதில் காவிரியம்மாபட்டியில் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது திடீரென பொக்லைன் எந்திரம் தீப்பற்றி எரிந்தது.

இதைபார்த்ததும் டிரைவர் கீழே குதித்து உயிர்தப்பினார். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.

இருப்பினும் பொக்லைன் எந்திரம் முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News