உள்ளூர் செய்திகள்

பில்லூர் அணை அருகே பவானி ஆற்றில் மிதந்த ஆண் பிணம்

Published On 2022-09-16 10:18 GMT   |   Update On 2022-09-16 10:18 GMT
  • பவானி ஆற்றில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பதாக தகவல் வந்தது.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேட்டுப்பாளையம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் அணை அருகில் பவானி ஆற்றில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸ் மற்றும் வருவாய் துறையினர் ஆணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பில்லூர் அணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

Similar News