உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் ப்ளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயற்குழு கூட்டம்

Published On 2023-02-13 15:00 IST   |   Update On 2023-02-13 15:00:00 IST
  • மார்ச் 15-ந் தேதி உலக நுகர்வோர் தினத்தை சிறப்பாக கொண்டாட வேண்டும்.
  • குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதை சரி செய்ய வலியுறுத்த வேண்டும்.

அரவேணு,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ப்ளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் மாதாந்திர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் வாசுதேவன், செயலாளர் முகமது சலீம், பொருளாளர் மரியம்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் மார்ச் 15-ந் தேதி உலக நுகர்வோர் தினத்தை சிறப்பாக கொண்டாடுவது, வரும் கோடை காலத்தை கருத்தில் கொண்டு நகர பகுதிகளில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதை சரி செய்ய வலியுறுத்துவது.

கோத்தகிரி அரசு சித்தா பிரிவில் போதிய மருந்துகள் இல்லாமல் இருப்பதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் இணை செயலாளர் கண்மணி, ஆலோசகர் பிரவின், முகமது இஸ்மாயில், கிரேஸி, செயற்குழு உறுப்பினர்கள் விபின் குமார், சுரேஷ், லலிதா, சங்கீதா, திரைசா, ரோஸ்லின், ராதிகா, பியூலா, மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கூடுதல் செயலாளர் பீட்டர் நன்றி கூறினார்.

Tags:    

Similar News