உள்ளூர் செய்திகள்

பொன்னேரியில் பாஜக சார்பில் ரத்த தான முகாம்

Published On 2023-07-19 15:27 GMT   |   Update On 2023-07-19 15:27 GMT
  • ரத்ததான நிகழ்ச்சியை பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன் துவக்கி வைத்தார்.
  • பாஜக நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்று ரத்த தானம் செய்தனர்.

பொன்னேரி:

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ரத்ததான முகாம் பொன்னேரி நகர பாஜக சார்பில் நடைபெற்றது. பிரானதா சக் ஷம், சேவா பாரதி மற்றும் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை இணைந்து நடத்திய இந்த முகாமில் பாஜக நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்று ரத்த தானம் செய்தனர்.

ரத்ததான நிகழ்ச்சியை பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை பொன்னேரி நகரத் தலைவர் சிவகுமார் ஏற்பாடு செய்தார். பாஜக மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் குமார், அன்பாலாயா சிவகுமார், நந்தன், கோட்டி, பாலாஜி, ரமேஷ், பவித்ரா, சுகன்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News