உள்ளூர் செய்திகள்
சின்னசேலத்தில் வெளுத்து வாங்கிய மழை
- சின்ன சேலம் பகுதியில் கடந்த சில தினங்களாக பரவலாக நல்ல மழை பொழிந்து வருகிறது.
- ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பொழிந்த கனமழையால் சின்னசேலம் பஸ் நிலையத்தின் அருகே உள்ள சாலைகளில் வெள்ளம் போல் மழை நீர் ஓடியது.
கள்ளக்குறிச்சி:
சின்ன சேலம் பகுதியில் கடந்த சில தினங்களாக பரவலாக நல்ல மழை பொழிந்து வருகிறது. இதனால் கிணறு, ஏரி போன்றவற்றை வேகமாக நீர் நிரம்பி வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்த வருகின்றனர். நேற்று மாலை 4 மணி அளவில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பொழிந்த கனமழையால் சின்னசேலம் பஸ் நிலையத்தின் அருகே உள்ள சாலைகளில் வெள்ளம் போல் மழை நீர் ஓடியது. சில இடங்களில் முழங்கால் அளவிற்கு மழை நீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்து உள்ளனர். பள்ளி நேரம் முடிந்து மாணவர்கள் வீட்டுக்கு செல்லும் நேரத்தில் மழை வந்ததால் மாணவர்கள் மழையில் நடந்தபடியே சென்றனர். மழைநீர் செல்வதற்கு வழி இல்லாமல் சாலைகளில் தண்ணீர் அதிக அளவில் தேங்கி நிற்கின்றது.