பா.ஜனதா பட்டியல் அணியினர் ஆர்ப்பாட்டம்
- தி.மு.க. அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
- மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பா.ஜனதா கட்சி யின் பட்டியல் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் புதிய பஸ் நிலையம் அருகில் அண்ணா சிலை எதிரில் நேற்று நடந்தது. மத்திய அரசு பட்டியல் இன மக்களுக்கு ஒதுக்கிய நல திட்ட நிதியை, பட்டியல் இன மக்களுக்கு சேர்க்காமல் முறையாக பயன்படுத்தாததாக தி.மு.க. அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு மாவட்ட தலைவர் ஆர்.கே.ரவி தலைமை தாங்கினார். நகர தலைவர் கவுன்சிலர் சங்கர் வரவேற்றார். மாநில பட்டியல் அணி துணை தலைவர் கஸ்தூரி, மாநில செயற்குழு உறுப்பினர் சூரியமூர்த்தி, மாவட்ட தலைவர் சிவப்பிரகாஷ், முன்னாள் மாவட்ட தலைவர் கோட்டீஸ்வரன் ஆகியோர் பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் பட்டி யல் இன மக்க ளுக்கு ஒதுக்கிய பணத்தை அவர்களுக்கே வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட பொருளாளர் கவியரசு, பொதுச் செயலா ளர் சங்கர், துணை தலைவர் ராஜேந்திரன், செயலாளர் டெம்போ முருகேசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடி வில் ரமேஷ் நன்றி கூறினார்.