உள்ளூர் செய்திகள்
அரசூரில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- அரசூரில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
- கூட்டுறவு பிரிவு மாநில துணைத்தலைவர் ஏ.ர.வேலு முன்னிலை வகித்தார்.
விழுப்புரம்:
பா.ஜனதா கட்சி சார்பில் மின்சாரம் மற்றும் பால் விலை உயர்வை கண்டித்து. கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசூர் கூட்ரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஆன்மீக பிரிவு தலைவர் வைத்திலிங்கம், கதிரவன் ஆகியோர் தலைமை தாங்கினார். கூட்டுறவு பிரிவு மாநில துணைத்தலைவர் ஏ.ர.வேலு முன்னிலை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில் பால் மற்றும் மின்சார விலை உயர்வை கண்டித்து பிறமொழி மாவட்ட தலைவர் மாரி கண்டன உரையாற்றினார். ஒன்றிய துணைத் தலைவர் சிவபாலன், ஒன்றிய பொதுச் செயலாளர் மூர்த்தி, ஒன்றிய செயலாளர் ஹரி பாவாடைராயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.