உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் மின்சாரம் தாக்கி காட்டெருமை பலி

Published On 2022-08-07 09:26 GMT   |   Update On 2022-08-07 09:26 GMT
  • காட்டு மாடு, கரடி, சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
  • வனத்துறையினர் விரைந்து வந்து காட்டெருமையை பார்வையிட்டனர்.

அரவேணு

நீலகிரி மாவட்டம் கட்டபெட்டு வனசரகத்தில் யானை, காட்டு மாடு, கரடி, சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

இந்த வனவிலங்குகள் அவ்வப்போது வனத்தைவிட்டு வெளியேறி குடியிருப்பு பகுதி மற்றும் தேயிலை தோட்டங்களில் நடமாடி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளது.

நடு ஹட்டி கிராமத்ைதயொட்டிய தேயிலை தோட்டத்தில் நேற்று காலை வழக்கம்போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தேயிலை தோட்டத்திற்குள் காட்டெருமை ஒன்று இறந்த நிலையில் கிடந்தது. இதுகுறித்து மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

வனசரகர் செல்வகுமார் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து காட்டெருமையை பார்வையிட்டனர். பின்னர் காட்டெருமை இறந்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது, தேயிலை தோட்டம் வழியாக செல்லும் மின்கம்பி, அறுந்து கிடந்ததை பார்த்தனர். இதனால் காட்டெருமை மின்சாரம் தாக்கி இறந்தது தெரியவந்தது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், தேயிலை தோட்ட பகுதியில் மின்சார கம்பி அறுந்து கிடந்துள்ளது. அப்போது தேயிலை தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த காட்டெருமை எதிர்பாரத விதமாக மின்சார கம்பியில் மோதி இறந்துள்ளது என்றனர்.

இதையடுத்து வனத்துறையினர் இன்று காலை கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் இறந்த காட்டெருமையின் உடலை உடற்கூராய்வு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News