உள்ளூர் செய்திகள்

இருதரப்பினர் மோதல்; 5 பேர் கைது

Published On 2023-06-20 15:26 IST   |   Update On 2023-06-20 15:26:00 IST
  • அதே பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (32), கஜேந்திரன் (31), முருகேசன் (27), சிவா ஆகியோருக்கு தகவல் கொடுத்து வரவழைத்து நாகேஷை சரமாரியாக தாக்கி மிரட்டல் விடுத்தனர்.
  • சிவக்குமார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நாகேஷை கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சானசந்திரம் பகுதியைச் சேர்ந்தவர் நாகேஷ் (வயது25). இவரது வீட்டின் முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் தனது வண்டியை நிறுத்திவிட்டு ரேஷ் செய்ததால் அதிக சத்தம் எழுந்தது. அப்போது அங்கு வந்த நாகேஷ் அந்த வாலிபரை தட்டிகேட்டதால் வாய்தகராறு ஏற்பட்டது. உடனே இதுகுறித்து வாலிபர் அதே பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (32), கஜேந்திரன் (31), முருகேசன் (27), சிவா ஆகியோருக்கு தகவல் கொடுத்து வரவழைத்து நாகேஷை சரமாரியாக தாக்கி மிரட்டல் விடுத்தனர்.

இதில் பலத்த காயமடைந்த நாகேஷ் ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் மீது வழக்கு பதிவு செய்து சிவக்குமார், கஜேந்திரன், முருகேசன், சிவா ஆகிய 4 பேர் கைது செய்தனர். இதேபோன்று சிவக்குமார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நாகேஷை கைது செய்தனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News