உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

பழனிசெட்டிபட்டியில் பைக் திருட்டு

Published On 2022-12-26 11:31 IST   |   Update On 2022-12-26 11:31:00 IST
  • மோட்டார் சைக்கிளை வீட்டிற்கு வெளியே நிறுத்தி விட்டு சாப்பிட சென்றார்.
  • திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை.

தேனி:

பழனிசெட்டிபட்டி தென்றல் நகரை சேர்ந்தவர் பழனிக்குமார். இருசக்கர வாகன காண்டிராக்டர் பணி செய்து வருகிறார்.

சம்பவத்தன்று இவர் தனக்குசொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டிற்கு வெளியே நிறுத்தி விட்டு சாப்பிட சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அக்கம் பக்கம் விசாரித்தும் தகவல் கிடைக்காததால் பி.சி.பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News