உள்ளூர் செய்திகள்

ஒடிசா- கோவை இடையேசேலம் வழியாக வாராந்திர சிறப்பு ரெயில்

Published On 2023-04-18 15:05 IST   |   Update On 2023-04-18 15:05:00 IST
  • ஒடிசா மாநிலம் சாம்பல்பூரில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக கோவைக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
  • இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம்:

ஒடிசா மாநிலம் சாம்பல்பூரில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக கோவைக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

அதன்படி சாம்பல்பூர் - கோவை வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண் 08311) நாளை முதல் வருகிற ஜூன் மாதம் 28-ந் தேதி வரை புதன்கிழமை களில் சாம்பல்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 10.55 மணிக்கு புறப்பட்டு பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக மாலை 6.42 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 6.45 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர் வழியாக வியாழக்கிழமை இரவு 9.40 மணிக்கு கோவை சென்றடையும்.

இதேபோல் மறு மார்க்கத்தில் கோவை - சாம்பல்பூர் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண் 08312) வருகிற 21-ந் தேதி முதல் ஜூன் மாதம் 30-ந் தேதி வரை வெள்ளிக்கி ழமைகளில் கோவையில் இருந்து மதியம் 12 மணிக்கு புறப்பட்டு திருப்பூர், ஈரோடு வழியாக மதியம் 2.47 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் இங்கிருந்து 2.50 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் வழியாக மறுநாள் (சனிக்கிழமை) இரவு 9.15 மணிக்கு சாம்பல்பூர் ரெயில் நிலையம் சென்றடையும.

இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News