உள்ளூர் செய்திகள்

திருவெண்ணைநல்லூர் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்

Published On 2022-07-16 09:40 GMT   |   Update On 2022-07-16 09:40 GMT
திருவெண்ணைநல்லூர் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

விழுப்புரம்:

திருவெண்ணைநல்லூர் சிறப்பு தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் திருவெண்ணைநல்லூர் போலீஸ் ஷாப் இன்ஸ்பெக்டர் பிரபு தலை மையிலான போலீசார் நேற்று இரவு திருக்கோவிலூரில் இருந்து திருவெண்ணைநல்லூர் செல்லும் வழியில் உள்ள சித்தலிங்க மடம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் வேகமாக வந்த இரண்டு நபரை நிறுத்தி அவர்களிடம் சோதனை செய்தனர். அந்த சோதனையில் அவர்க ளிடம் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் ஹோன்ஸ் 1140 பாக்கெட்டுகள் விமல் பாக்கெட் 1200 என மொ த்தம் 2340 பாக்கட்டு களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில் திருக்கோ விலூரைச் சேர்ந்த சதீஷ் (வயது 55) சித்தலிங்கமடம் பகுதியில் சேர்ந்த ராஜேந்திரன் (42) என்பது தெரிய வரவே திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு வழக்கு பதிவு செய்து 2 பேரையும் செய்து கைது செய்தனர். மேலும் அவர்கள் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. 

Tags:    

Similar News