உள்ளூர் செய்திகள்
தடை செய்யப்பட்ட லாட்டரி விற்றவர் கைது
- அவர் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்வது தெரிய வந்தது.
- மேலும் அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகள், பணம் ரூ 2950 பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை போலீசார் மஸ்தி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்வது தெரிய வந்தது.
அடுத்து அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் கிருஷ்ணகிரி மேல்சோமார்பேட்டை ராஜீவ் நகரையை சேர்ந்த முருகன் (வயது 43) என தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகள், பணம் ரூ 2950 பறிமுதல் செய்தனர்.