உள்ளூர் செய்திகள்

தஞ்சை பெரிய கோவிலில் சதய விழாவுக்கான பந்தக்கால் நடப்பட்டது.

தஞ்சை பெரிய கோவிலில் சதய விழாவுக்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி

Published On 2023-10-11 09:56 GMT   |   Update On 2023-10-11 09:56 GMT
  • வருகிற 25-ந் தேதி ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
  • பந்தக் காலுக்குப் பல்வேறு பூஜைகளும், தீபாராதனையும் செய்யப்பட்டன.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் பெரியகோவிலில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1038 ஆவது சதய விழா வரும் 24 மற்றும் 25 ஆகிய 2 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

சதயவிழா

பார் போற்றும் புகழுடைய தஞ்சை பெரியகோவிலைக் கட்டித் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்த மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை அவர் பிறந்த விண்மீனாகிய ஐப்பசி சதய நாளன்று சதய விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038 -வது சதய விழா வரும் 24 ஆம் தேதி தொடங்குகிறது.

சதய நட்சத்திர நாளான 25 ஆம் தேதி ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்தபடி, இவ்விழா அரசு விழாவாக நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு சதய விழாவுக்கான பந்தல் கால் நடும் நிகழ்ச்சி இன்று பெரிய கோவிலில் நடைபெற்றது.

பந்தக் காலுக்குப் பல்வேறு பூஜைகளும், தீபாராதனையும் செய்யப்பட்டன.

பின்னர் பந்தக்கால் நடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சதய விழாக் குழுத் தலைவர் து. செல்வம், துணை தலைவர் மேத்தா, அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகரன், உதவி ஆணையர் கவிதா, கோயில் செயல் அலுவலர் மாதவன், நகை சரிபார்ப்பு துணை ஆணையர் சூரியநாராயணன், நகை சரிபார்ப்பு அதிகாரி சுப்பிரமணியன், கவிஞர் செழியன் உளபட பலர் கலந்து கொண்டனர்.

வரும் 24, 25 ஆகிய இரு நாட்கள் நடக்கும் சதய விழாவில் பட்டிமன்றம், நாட்டிய நாடகம், திருமுறை அரங்கம், கருத்தரங்கம், கவியரங்கம், நாட்டிய நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், பெருவு டையார், பெரியநாயகிக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெறவுள்ளன. 

Tags:    

Similar News