உள்ளூர் செய்திகள்

பால்குடம் சுமந்து வந்த பக்தர்கள்.

மாரியம்மன் கோவிலில் பால்குட திருவிழா

Published On 2022-07-30 10:48 GMT   |   Update On 2022-07-30 10:48 GMT
  • நல்லாடை மெயின் ரோட்டில் உள்ள செல்லப்பா கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் சுமந்து கொண்டு கடைத்தெரு வழியாக கோவிலை வந்தடைந்தனர்.
  • மாரியம்மனுக்கு பாலாபிஷேகம் செய்த பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் கண்டியன் குளத்தூர் மாரியம்மனுக்கு 21 ஆம் ஆண்டு பால்குட திருவிழா சமையல் கலைஞர்கள் தலைமையில் நடைபெற்றது. நல்லாடை மெயின் ரோட்டில் உள்ள செல்லப்பா கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் சுமந்து கொண்டு கடைத்தெரு வழியாக கோவிலை வந்தடைந்தனர்.

பச்சைக்காளி பவளக்காளி நாதஸ்வர இன்னிசை மற்றும் பம்பை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாரியம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபட்டனர். கஞ்சி வார்த்தல் அன்னதானமும் செம்பனார்கோயில் சமையல் கலைஞர்கள் வழங்கினர்.

Tags:    

Similar News