கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் பாலாலயம்
- 4-ம் கால யாகசாலை பூஜையுடன் தொடங்கி யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டது.
- அத்திமரத்தில் வரையப்பட்ட 27 விமான சித்ர படத்துக்கு கலசாபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சுவாமிமலை:
கும்பகோணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மங்களாம்பிகை அம்பாள் சமேத ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக அரசு மற்றும் உபயதாரர்கள் மூலம் ரூ. 8 கோடி மதிப்பில் திருப்பணிகள் தொடங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, கடந்த 24-ந்தேதி காலை மகா கணபதி, மகாலட்சுமி, நவக்கிரக ஹோமங்கள், அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து, 25-ந்தேதி தன, கஜ, கோ, அஸ்வ பூஜைகளுடன் முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, நேற்று 2, 3-ம் கால யாகசாலை பூஜைகளும், மகா பூர்ணாஹுதியும் நடைபெற்றது.
முக்கிய நிகழ்வான பாலாலய விழா இன்று அதிகாலை 4 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜையுடன் தொடங்கி யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு, அத்திமரத்தில் வரையப்பட்ட 27 விமான சித்ர படத்துக்கு கலசாபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி ஆணையர் சாந்தா, செயல் அலுவலர்கிருஷ்ண குமார் மற்றும் கோவில் பணியாளர்கள், உபயதா ரர்கள் செய்திருந்தனர்.