உள்ளூர் செய்திகள்

வாகனம் மோதி பேக்கரி ஊழியர் பலி

Published On 2023-02-19 09:46 GMT   |   Update On 2023-02-19 09:46 GMT
  • அவ்வழியாக வந்த பள்ளி வாகனம் ஒன்று அவர் மீது மோதியது.
  • இதில் சம்பவ இடத்திலேயே விக்னேஷ் உயிரிழந்தார்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கோடூர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் விக்னேஷ் (வயது 23). இவர் ஊட்டியில் தங்கி அங்குள்ள பேக்கரி ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

விடுமரைக்கு ஊருக்கு வந்திருந்த விக்னேஷ் தனது நண்பரின் மோட்டார் சைக்கிளை இரவல் வாங்கி கொண்டு தனது சகோதரி வீட்டுக்கு செல்வதாக கூறி பறப்பட்டு சென்றுள்ளார்.

நேற்று மதியம் ஆதனூர் பஸ் நிறுத்தம் அருகே விக்னேஷ் சென்றபோது அவ்வழியாக வந்த பள்ளி வாகனம் ஒன்று அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே விக்னேஷ் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பென்னாகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News