உள்ளூர் செய்திகள்

அய்யா அவதார விழா நடந்தபோது எடுத்த படம்.

கோவில்பட்டி அருகே பூமாதேவி ஆலயத்தில் அய்யா அவதார விழா

Published On 2023-03-04 07:00 GMT   |   Update On 2023-03-04 07:00 GMT
  • கோவில்பட்டி அருகே அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் அய்யா வைகுண்ட அவதார விழா நடைபெற்றது.
  • அம்பாள் குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பூர்ண கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் பிரசித்தி பெற்ற அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் அய்யா வைகுண்ட அவதார விழா நடைபெற்றது

அதை தொடர்ந்து காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்றது. 7.36 மணிக்கு அம்பாள் குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 18 வகையான மஞ்சள், மா பொடி, திரவியம், பால், தேன், சந்தனம், பூர்ண கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து அய்யா வைகுண்டருக்கு சிறப்பு பணிவிடை செய்யப்பட்டு போதனைகள் லட்சுமணன் பணிவிடையாளர் தலைமை யில் ஆலய பணிவிடையாளர் செல்வ சுப்பிரமணியன் செய்தார்.

இதில் சுப்பாராஜ், சங்கரேஸ்வரி, மாரியப்பன், மகாராஜா, ஆறுமுகம், விளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி இசக்கிமுத்து, மாரித்தாய், செல்வராணி, ஜோதிலட்சுமி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்விழா ஏற்பாடுகளை ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலய குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News