உள்ளூர் செய்திகள்

அரசு பஸ்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

அரசு பஸ்களில் குழந்தை கடத்தல் தொடர்பாக விழிப்புணர்வு ஸ்டிக்கர்

Published On 2022-08-09 07:50 GMT   |   Update On 2022-08-09 07:50 GMT
  • குழந்தை திருமணம் மற்றும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, சைல்டுலைன் அமைப்பின் செயல்பாடு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
  • அனைத்து பஸ்களிலும் விழிப்புணர்வு ஸ்டிக்கரை ஒட்டினர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் குழந்தை திருமணம் மற்றும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, சைல்டுலைன் அமைப்பின் செயல்பாடு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் தடுப்பு பிரிவு போலீசார் பஸ்நிலையத்திற்கு வந்த அனைத்து பஸ்களிலும் விழிப்புணர்வு ஸ்டிக்கரை ஒட்டினர்.

பொதுமக்களுக்கும் துண்டுபிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது. குழந்தை கடத்தல் மற்றும் பாலியல்தொல்லை குறித்து பொதுமக்கள் அரசின் இலவச தொலைபேசிகளில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News