உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளியில் மாணவிகள் சேர்க்கையை வலியுறுத்தி ஊர்வலம்

Published On 2023-04-26 13:41 GMT   |   Update On 2023-04-26 13:41 GMT
  • அரசின் திட்டங்களை விளக்கி துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர்.
  • ஊர்வலத்தை தடபெரும்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பாபு துவக்கி வைத்தார்.

பொன்னேரி:

பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் ஜெய் கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவிகள் சேர்க்கையை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. பள்ளி மாணவிகள் பதாகைகள் ஏந்தியபடி பள்ளியில் இருந்து புறப்பட்டு தடப்பெரும்பாக்கம், திருவேங்கடபுரம், வெண்பாக்கம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ஊர்வலமாக வந்தனர். அப்போது அரசின் திட்டங்களை விளக்கி துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர்.

ஊர்வலத்தை தடபெரும்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பாபு துவக்கி வைத்தார். இதில் பள்ளி தலைமை ஆசிரியை ஆனந்தீஸ்வரி, உதவி தலைமை ஆசிரியர் வெங்கடேசன், மகேஸ்வரி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் செல்வம், அர்ச்சனா, உமையாள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News