உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் லலிதா கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

விழிப்புணர்வு பிரச்சார வாகனம்- கலெக்டர் தொடங்கி வைத்தார்

Published On 2022-09-28 10:05 GMT   |   Update On 2022-09-28 10:05 GMT
  • விவசாயம் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வதற்கான பல்வேறு கடன் திட்டங்கள் வழங்கப்படுகிறது.
  • கடன் திட்டங்கள் குறித்து விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு வாகன சேவை தொடங்கியது.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை தனியார் வங்கியின் சார்பில் வழங்கப்படும் விவசாயிகளுக்கான கடன் வசதி குறித்த விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட கலெக்டர் லலிதா தொடங்கி வைத்தார்.

தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இதையடுத்து, இம்மாவட்டத்தில்கிராமப்புறங்களில் விவசாயிகளின் விவசாயம் சார்ந்த உள்கட்ட மைப்பு மற்றும் அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை உள்கட்டமைப்புகளை வலுப்படுத்தும் விதமாக தனியார் வங்கியின் சார்பில் டிராக்டர் கடன், கிசான் கோல்டு கார்டு, தங்க நகைக் கடன், சேமிப்பு கணக்கு, வைப்பு நிதி, கார் கடன், இருசக்கர வாகன கடன், நுகர்வோர் பொருள்களுக்கான கடன், விவசாயகடன், விவசாயம் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வதற்கான குறு மற்றும் நீண்ட கால கடன் உள்ளிட்ட பல்வேறு கடன் திட்டங்கள் வழங்கப்படுகிறது.

இந்த கடன் திட்டங்கள் குறித்து விவசாயிகள் அறிந்து கொள்ளும் விதமாக அவ்வங்கியின் சார்பில் செவ்வாய்க்கிழமை விழிப்புணர்வு வாகன சேவை தொடங்கியது. மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் லலிதா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் காமாட்சி மூர்த்தி பிரச்சார வாகனத்தை துவக்கிவைத்து விவசாயிகளுக்கு விழி ப்புணர்வை ஏற்படுத்தினர். ஒன்றிய ஆணையர் அன்பரசன், மேலாளர் ஜெயராமன், உடன் இருந்தனர்.

இதில் தனியார் வங்கியின் மண்டல மேலாளர் வசந்தன், கிளை மேலாளர் சந்தோஷ்குமார், உதவி மேலாளர்கள் ஹரிகிருஷ்ணன், சதீஷ்கு மார், திருமூர்த்தி, பிரேம்குமார், சந்தோஷ்கு மார், பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News