உள்ளூர் செய்திகள்

காரிமங்கலம் அரசு பெண்கள் கல்லூரியில் உழவன் செயலி குறித்த விழிப்புணர்வு முகாம்

Published On 2023-07-22 15:29 IST   |   Update On 2023-07-22 15:29:00 IST
  • காரிமங்கலம் அரசு பெண்கள் கல்லூரியில் உழவன் செயலி குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
  • தமிழக அரசின் வேளாண்மை துறை மற்றும் அதனை சார்ந்த துறைகளின் திட்டங்கள் குறித்து விவசாயிகள் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் உழவன் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

காரிமங்கலம்,

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேளாண்மை துறை மற்றும் என்.எஸ்.எஸ். சார்பில் உழவன் செயலி குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது கல்லூரி முதல்வர் கீதா தலைமை வகித்தார்.

வேளாண்மை துணை இயக்குனர் குணசேகரன் உதவி இயக்குனர் புவனேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு தமிழக அரசின் வேளாண்மை துறை மற்றும் அதனை சார்ந்த துறைகளின் திட்டங்கள் குறித்து விவசாயிகள் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் உழவன் செயலி தொடங்கப்பட்டது குறித்தும் இதன் பயன்பாடுகள் குறித்தும் மாணவிகளுக்கு விளக்கம் அளித்தனர் வேளாண்மை அலுவலர் கனகராஜ் உழவன் செயலி எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தார்.

இதற்கான ஏற்பாடுகளை உதவி விதை அலுவலர் செல்வம் மற்றும் பலர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News