விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
மயிலாடும்பாறை அருகே மனித, வனஉயிரின மோதல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு
- மூலக்கடை கிராமத்தில் ஸ்ரீவில்லிப்புதூர்-மேகமலை புலிகள் காப்பக மேகமலை கோட்டம் சார்பில் மனித, வன உயிரின மோதல் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
- காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட வன விலங்கு களால் தக்காளி, வாழை, கத்திரி உள்ளிட்ட பயிர்கள் அதிகமாக சேதம் அடைவதாக வனத்துறை அதிகாரியிடம் தெரிவித்தனர்.
வருசநாடு:
தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே மூலக்கடை கிராமத்தில் ஸ்ரீவில்லிப்புதூர்-மேகமலை புலிகள் காப்பக மேகமலை கோட்டம் சார்பில் மனித, வன உயிரின மோதல் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்குக் கண்டமனூர் வனச்சரகர் திருமுருகன் தலைமை தாங்கினார்.
கடமலை-மயிலை ஒன்றியக்குழு தலைவர் சித்ரா சுரேஷ், மந்திச்சுனை- மூலக்கடை ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி, வேளாண்மை துறை மற்றும் கால்நடை டாக்டர் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். கூட்டத்தில் சிறப்பாறை, மூலக்கடை, மந்திச்சுனை, ஆலந்தூர் உள்ளிட்ட மலை கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முகாமில் மலைக்கிராம விவசாயிகளுக்கு வனத்து றை சார்பில் ஏற்படுத்த ப்பட்டு வரும் பாதுகாப்புகள் மற்றும் வனப்பகுதியை பாது காப்பதில் விவசாயி களின் பங்கு குறித்து எடுத்துரை க்கப்பட்டது. அதேபோல ஒவ்வொரு கிராமத்திலும் குழு அமைத்து அதன் மூலம் மரம் வெட்டுதல், வேட்டை யாடுதல் உள்ளிட்ட வன குற்றங்களை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வனத்துறை யினருக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
மேலும் இந்த கூட்டத்தில் பொதுமக்கள் கூறுகையில், காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட வன விலங்கு களால் தக்காளி, வாழை, கத்திரி உள்ளிட்ட பயிர்கள் அதிகமாக சேதம் அடைவ தாக வனத்துறை அதிகாரி யிடம் தெரிவித்தனர். வனத்துறை அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தனர்.