உள்ளூர் செய்திகள்
பத்ரகாளியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா
- ஆயக்காரன்புலம் பத்ரகாளியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா நடைபெற்றது.
- மாவிளக்கு போடுதல், பால்குடம், காவடி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் மூன்றாம் சேத்தி பகுதியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக அம்மனுக்கு அர்ச்சனை செய்தல், மாவிளக்கு போடுதல், பால்குடம், காவடி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர்.
தொடர்ந்து, அம்மனுக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று.
பின்னர், வண்ண மலர்களால் அலங்கரி க்கப்பட்டு தீபாராதனை காண்பி க்கப்பட்டது.
இதில் ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.