உள்ளூர் செய்திகள்

வடவள்ளியில் விபத்தில் ஆட்டோ டிரைவர் பலி

Published On 2022-09-18 09:13 GMT   |   Update On 2022-09-18 09:13 GMT
  • வரதராஜனுக்கும் அவரது மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
  • விபத்தால் அரை மணிநேரம் மருதமலை சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

வடவள்ளி

கோவை வடவள்ளி அடுத்த நவாவூர் மருதாபுரம் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 45). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கல்பனா. இருவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன.

வரதராஜனுக்கும் அவரது மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று மாலை வரதராஜன் வழக்கம் போல வீட்டிற்கு சென்றார்.

அப்போது மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனைவிடம் கோபித்து கொண்டு தனது மோட்டார் சைக்கிளை எடுத்து வீட்டில் இருந்து வெளியே சென்றார்‌.

அப்போது மருதமலை நால்வர் நகர் அருகே வந்த போது மருதமலையில் இருந்து காந்திபுரம் நோக்கி சென்ற அரசு பஸ் திடீரென கட்டுப்பட்டை இழந்து வரதராஜன் மீது மோதியது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை, விபத்தில் இறந்து கிடந்த வரதராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விபத்தால் அரை மணிநேரம் மருதமலை சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News