உள்ளூர் செய்திகள்

பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறையில் பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

Published On 2022-12-01 14:52 IST   |   Update On 2022-12-01 14:52:00 IST
  • தமிழக அரசு பழைய ஓய்வூதியதிட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும்.
  • பயிற்சிக்கு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களை பயன்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலுயுறுத்தப்பட்டது.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் ஆதீஸ்வரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர்கள் செல்வம், முருகன், திருஞா னசம்பந்தம், மாவட்ட இணைச் செயலாளர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

மாவட்ட செயலாளர் ஜவகர் வரவேற்றார். மாநிலத் துணைத் தலைவர் அசோக்குமார் சிறப்புரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு பழைய ஓய்வூதியதிட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும். ஜூலை 1-ல் இருந்து முடித்து வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு மற்றும் நிலுவை தொகையை வழங்க வேண்டும்.

தொடக்க கல்வித்து றையில் நடைபெறும் எண்ணற்ற எழுத்தும் பயிற்சி மற்றும் சி.ஆர்.சி. பயிற்சிக்கு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களை பயன்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலுயுறுத்த ப்பட்டது.

முடிவில் மாவட்ட பொருளாளர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News