தூத்துக்குடியில் கல்லால் தாக்கி காவலாளியை கொல்ல முயற்சி-2 பேருக்கு வலைவீச்சு
- வேல்சாமி டி-சவேரியார்புரம் பகுதியில் உள்ள ஒரு கடையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
- முத்து, விஜயன் ஆகியோர் வேல்சாமியை கீழே தள்ளி தாக்கினர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தாளமுத்து நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் வேல்சாமி (வயது 90). இவர் டி-சவேரியார்புரம் பகுதியில் உள்ள ஒரு கடையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
தகராறு
அதேபகுதியை சேர்ந்த மற்றொரு கடையில் வேலைபார்த்து வரும் முத்து, விஜயன் ஆகியோர் அங்கிருந்த முட்செடிகளை அகற்றி வேல்சாமி வேலைபார்க்கும் கடையின் முன்பு கொட்டியுள்ளனர். இதனை அவர் தட்டிக்கேட்டு ள்ளார்.
அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது தகராறாக மாறியது.
இதில் ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள் முத்து, விஜயன் ஆகியோர் வேல்சாமியை கீழே தள்ளி தாக்கினர். தொடர்ந்து அங்கிருந்த கற்களை எடுத்து அவர் மீது வீசி தாக்கினர்.
இதில் பலத்த காயம் அடைந்த வேல்சாமி தூத்துக்குடி அரசு மருத்தவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக தாள முத்துநகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் முத்து, விஜயன் ஆகியோரை தேடி வருகின்றனர்.