உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் வியாபாரி மீது தாக்குதல்; வாலிபர் கைது

Published On 2023-02-21 07:47 GMT   |   Update On 2023-02-21 07:47 GMT
  • ராஜ்குமார் தூத்துக்குடி பீச் ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தங்கி இருந்து வருகிறார்.
  • பாத்திமா நகர் 3-வது தெருவை சேர்ந்த தொழிலாளி திலக் என்பவர் ராஜ்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தூத்துக்குடி:

கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 28). வியாபாரி. இவர் தூத்துக்குடி பீச் ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தங்கி இருந்து வருகிறார்.

நேற்று இரவு அந்த ஓட்டலில் ராஜ்குமார் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாத்திமா நகர் 3-வது தெருவை சேர்ந்த தொழிலாளி திலக் என்பவர் ராஜ்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் அங்குள்ள சாலையில் ராஜ்குமார் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை திலக் சரமாரியாக அடித்து தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த ராஜ்குமார் தென்பாகம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணரமேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து திலக்கை கைது செய்தனர்.

Tags:    

Similar News