உள்ளூர் செய்திகள்

திருக்குறுங்குடி அருகே தாய்-மகன் மீது தாக்குதல்

Published On 2022-12-26 09:24 GMT   |   Update On 2022-12-26 09:24 GMT
  • திருக்குறுங்குடி அருகே உள்ள மேலகட்டளையை சேர்ந்தவர் ராஜம்மாள்.கூலி வேலை செய்து வருகிறார்.
  • இதையடுத்து ராஜம்மாளையும் செல்வின் தாக்கினார். இதில் காயமடைந்த ராஜம்மாள் சிகிச்சைக்காக ஏர்வாடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

களக்காடு:

திருக்குறுங்குடி அருகே உள்ள மேலகட்டளையை சேர்ந்தவர் ராஜம்மாள் (வயது65). இவரது கணவர் சுந்தர்ராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். ராஜம்மாள் கூலி வேலை செய்து வருகிறார்.

சம்பவத்தன்று இரவில் ராஜம்மாளின் மகன் ஜான் தனது நண்பர்களுடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் விழாவிற்காக மேலகட்டளையில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் அலங்காரப் படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த முத்துப்பாண்டி மகன் செல்வின், ஜானை பார்த்து ஆலயத்தை அலங்காரப்படுத்த நீங்கள் யார்? எனக் கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த செல்வின், ஜானை தாக்கினார். இதைப்பார்த்த ராஜம்மாள் தட்டிக் கேட்டார். இதையடுத்து ராஜம்மாளையும் செல்வின் தாக்கினார். இதில் காயமடைந்த ராஜம்மாள் சிகிச்சைக்காக ஏர்வாடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தாய், மகனை தாக்கிய செல்வினை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News