உள்ளூர் செய்திகள்

துணி வியாபாரி வீட்டில் தங்க நகைகள்

Published On 2023-02-09 15:34 IST   |   Update On 2023-02-09 15:34:00 IST
  • வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
  • வீட்டில் இருந்த 11 பவுன் தங்க நகை, வெள்ளி திருடு போனது தெரியவந்தது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அடுத்துள்ள பெரியமோட்டூர் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது57), இவர் துணி வியாபாரம் செய்து வந்தார்.

கடந்த 2-ந்தேதி அன்று வீட்டை பூட்டி விட்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர் அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த 11 பவுன் தங்க நகை, வெள்ளி மற்றும் பணம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.

இது குறித்து அவர் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News