உள்ளூர் செய்திகள்

சேலம் புதிய பஸ் நிலையத்தில்மயங்கி விழுந்து பெண் உள்பட 2 பேர் பலி

Published On 2023-04-20 14:52 IST   |   Update On 2023-04-20 14:52:00 IST
  • திய பஸ் நிலையம் அருகே கடந்த 17-ந் தேதி சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார்.
  • அந்த பகுதியினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சேலம்:

சேலம் புதிய பஸ் நிலையம் அருகே கடந்த 17-ந் தேதி சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை அந்த பகுதியினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் பலனின்றி, 18-ந் மாலை இறந்து போனார். உயிரிழந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

இதேபோல், சேலம் புதிய பஸ் நிலையம் பகுதியில் கடந்த 2-ந் தேதி சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், வயிற்று வலியால் திடீரென மயங்கி விழுந்தார். அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி கடந்த 9-ந் தேதி, அந்த நபர் உயிரிழந்தார். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து விபரம் தெரியவில்லை.

இதுகுறித்த புகார்களின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Tags:    

Similar News