உள்ளூர் செய்திகள்
அதிகாரிகள் மத்தியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசிய காட்சி.
ஓலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு
- ஓலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு செய்தார்.
- மக்கள் பிரதிநிதிகள் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும்.
விழுப்புரம்:
திண்டிவனம் சட்டமன்ற தொகுதி, ஓலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவல கத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான்மா தாந்திர ஆய்வு மேற்கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.முன்னாள் எம்.எல்.ஏ. சீதாபதி சொக்கலிங்கம், யூனியன் தலைவர், சொக்கலிங்கம், துணை தலைவர் ராஜாராம், மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,ஒன்றிய கவுன்சிலர்கள்,ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசுகையில் மக்கள் பிரதிநிதிகள் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும்.அதிகாரிகள் மக்களின் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.